Tuesday, March 8, 2011

வெளிநாடு செல்லும் நம்மவர்கள்.. பப்ளிக்-ல உம்மாவா?? 2nd part!!

முதல் ஆறு மொக்கையை படிக்க இங்கே கிளிக்கவும்!!

7. மன்னன் படத்துல ரஜினி-யும், கவுண்டரும் சின்ன தம்பி படத்துக்கு கத்தி, ஆசிட் எல்லாம் காட்டி டிக்கெட் வாங்குறது ஒரு காமெடி-க்காக.. அதையே வேதமா எடுத்துட்டு அந்த நாட்ல க்கீயு ஜம்ப் பண்ணக்கூடாது.. அங்கல்லாம் க்கீயு ஜம்ப் பண்றது ரொம்ப ரொம்ப அநாகரீகமா கருதப்படும்.. நீங்க சில சமயம் தர்ம அடி வாங்க வேண்டி வந்தாலும் வரலாம்.. இதுவரை வாங்கலைன்னா பூர்வ ஜென்ம புண்ணியம்ன்னு நெனச்சுக்கோங்க.. For Ex: சூப்பர் மார்க்கெட்-ல நீளமான க்கீயு இருக்கறப்ப நீங்க ஒன்னு ரெண்டு பொருள் மட்டும் வாங்கற மாதிரி இருந்தா, (அதுக்குன்னு தனி க்கீயு இல்லாதபட்சத்தில்) முன்ன இருக்கறவங்க கிட்ட ஒரு "ப்ளீஸ்.." போட்டு கேட்டீங்கன்னா அவங்களே விட்டுக்கொடுத்திருவாங்க..


8. அந்த நாட்டு மக்களின் உடைகள் பேஷன் என்ற பேரிலோ கஞ்சத்தனத்தினாலோ கம்மியா இருக்க வாய்ப்பு இருக்கு.. அதுக்காக நம்ம ஊர்ல போஸ்டரையே திங்கற மாதிரி பார்க்கறது போல, அங்க போய் கலியுக துச்சாதனனா கண்ணாலேயே துகிளுரிக்கக் கூடாது.. "Staring is bad manners" உங்க வீட்ல சொல்லிதரலயான்னு பேச்சு வாங்க வேண்டி வரும்..
இதுக்காகவே ஸ்விம்மிங் பூல் போறவங்களும் ஜாக்கிரதை.. ஒரு சில நாட்ல, மொறைச்சு பாத்ததுக்கு போலீஸ்-ல கூட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.. கெடச்ச சந்துல ரோட்ட கிராஸ் பண்ணாலே பைன் போடறவங்க.. நீங்க வேற லைன் ஏதும் கிராஸ் பண்ணா என்ன ஆகும்ன்னு யோசிங்க.. நல்லா யோசிங்க!! சொல்றது நம்ம கடமை.. அப்புறம் உங்க இஷ்டம்..

9. நம்ம ஊர்ல ரெண்டாயிரம் ரூபாய்க்கு சாப்டாலும் ரெண்டு ரூபா தான் டிப்ஸ் வெச்சுட்டு போவாங்க.. சர்வர் மனசுக்குள்ள எல்லா பேட் வோர்ட்ஸ்-லயும் திட்டிட்டு போவான்.. அதனால நீங்க இருக்கற நாட்ல பில் அமௌன்ட்-ல எவ்ளோ சதவிதம் டிப்ஸ் வெக்கனுங்கரத தெரிஞ்சுக்கோங்க.. இல்லன்னா கூட வந்தவங்க கஞ்ச பயன்னு நெனைக்க வாய்ப்பிருக்கு..

10. சத்தமா பேசறது நம்ம மக்களுக்கு சாதாரணம்.. அது நம்ம ஊர்ல இருக்கறப்ப சில சமயம் கடுப்பா இருந்தாலும் யாரும் கண்டுக்கறதில்லை.. ஆனா வெளிநாட்ல அத ரொம்பவே தப்பா எடுத்துக்க வாய்ப்பிருக்கு.. அந்த நாட்டு மக்கள் பொது எடத்துல போன் பேசறதும் தெரியாது வெக்கறதும் தெரியாது.. ஆனா நம்ம ஆளுங்களுக்கு போன் தேவையே இல்ல, இங்க பேசற சத்தம் அங்கன நேராவே கேட்ரும் மத்தவங்களுக்கு காது ஜவ்வு அந்து போகும்..

11. கண்ட எடத்துல குப்பை போடறது, அப்புறம் நம்பர் ஒன் போறது எல்லாம் ரொம்ப ரொம்ப தப்பு.. மாட்டினா பைன்-ஓட சேத்தி பப்ளிக் டாய்லெட் கூட கிளீன் பண்ண வேண்டி வரும்..
அப்புறம் அங்க எல்லா எடத்துலயும் வெஸ்டேர்ன் ஸ்டைல் தான்.. எனக்கு இந்தியன் ஸ்டைல்ல போனாதான் வரும்ன்னு ஏறி உக்காந்து ஒடச்சுராதீங்க.. பொழப்பு நாறிடும்.. ஹி ஹி ஹி.. உடனே அனுபவம் பேசுதுன்னு எல்லாம் நக்கல் பண்ணக்கூடாது.. எல்லாம் காத்தோட வர்ற சேதி தான்.. ஹி ஹி ஹி..


12. வீட்ல வளக்கற நாய், பூனை இதெல்லாம் அவங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி.. அதனால இங்க நாய கண்டா கல்ல-வுட்டு அடிக்கற மாதிரி அங்க ஏதும் ஏடாகூடமா பண்ணீங்க அவ்ளோதான்.. மேட்டர் ஓவர் மோனே தினேஷா!!

இதில் பெரும்பாலானவை நம் நாட்டில் மிகவும் சாதாரணம் தான்.. அத இங்க செஞ்சா "எப்டி போறான் பாரு பரதேசி"-ன்னு திட்டுவாங்க.. ஆனா இதையே நீங்க அங்க செஞ்சா "எப்டி போறான் பாரு ஒரு 'இந்திய' பரதேசி"-ன்னு நம்ம நாட்டையும் சேத்தி திட்டுவாங்க.. நம்ம நாட்ட அவங்க நல்ல விதமாவோ இல்ல கெட்ட விதமாவோ பாக்கறது, நீங்க பண்ற ஒவ்வொரு சின்ன விசயத்துல தான் இருக்கு..

டிஸ்கி 1- அட இப்படி எல்லாம் இருக்கான்னு சிலர் உணர்ந்தா அதுவே போதும்..

டிஸ்கி 2- யார் என்ன சொன்னாலும் நாங்க இப்டியே தான் இருப்போம் சங்கம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லைங்கன்னா!!

டிஸ்கி 3- எல்லா போட்டோ-வும் கூகிள்-ல சுட்டது.. ஹி ஹி ஹி..

5 comments:

Kkarun09 said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

கீறிப்புள்ள!! said...

சுருங்க சொன்னாலும், நிறைவா சொன்னீங்க.. :)) ரொம்ப நன்றி நண்பா!!

அருண்பிரபு said...

அருமையா, நிறைவா சொல்லிருக்கீங்க!!!

கீறிப்புள்ள!! said...

மீண்டும் நன்றி அருண்பிரபு!! :)

Senthil34in said...

great!!!!!!!!!

senthil,doha

Post a Comment

இத்தனை நேரம் என் கீறலை பொருத்தமைக்கு நன்றிகள் கோடி.. இது நீங்கள் கீறுவதற்கான இடம்.. கொஞ்சம் கீறிட்டு போங்க பாஸு.. :))